தேரர் கொலை சந்தேகநபர் பொலிஸ் துப்பாக்கிச் சுட்டுக்கு பலி

Date:

கம்பஹா, மல்வத்துஹிரிபிட்டிய கஹதான ஸ்ரீ ஞானராம விகாரையில் தங்கியிருந்த 45 வயதுடைய நாமக தேரர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் நேற்று நள்ளிரவு பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக அத்தனகல்ல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.இல. 32, குடபொகுன, காஷ்யபபுர, அரலகங்வில ஆகிய இடங்களில் வசிக்கும் 27 வயதுடைய பெரேடோரபே கல்ஹார டில்ஷான், அத்தனகல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லிஹினியகொல்ல கால்வாய், ஊராபொல, ருவன்வெல்ல வீதிக்கு அருகில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்.கடந்த 10ஆம் திகதி ஹம்பேகமுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக பேலியகொட குற்றத்தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.குற்றப் பிரிவின் அதிகாரிகள், சந்தேக நபரை விசேட விசாரணைக்காக ஊராபொல லிஹினியகொல்ல கால்வாய் பகுதிக்கு அழைத்து வந்த போது, அவர் பொலிஸ் அதிகாரிகளைத் தாக்கி தப்பிச் செல்ல முற்பட்டதாகவும், தப்பிச் செல்ல முயன்ற சந்தேக நபர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாகவும் ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. .காவலில் இருந்து தப்பிச் செல்ல முயன்ற சந்தேக நபரால் தாக்கப்பட்ட பேலியகொட குற்றத்தடுப்பு பிரிவின் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் சிகிச்சைக்காக வட்டுபிட்டியலை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

10 அம்சக் கோரிக்கைகளை இந்திய உப-ஜனாதிபதியிடம் முன்வைக்க மனோ அணி திட்டம்

இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மலையக தமிழர்களில் எவரும் விரும்புகின்ற பட்சத்தில்,...

முக்கிய கோரிக்கைகளுடன் இந்திய துணை ஜனாதிபதியை சந்திக்க இ.தொ.கா தயார்

இலங்கைக்கு நாளை உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ள உள்ள இந்திய துணை ஜனாதிபதி...

JVPஇல் கோடீஸ்வரர்கள் உருவாகுவது மகிழ்ச்சி

ஜனதா விமுக்தி பெரமுன (JVP) கட்சியிலிருந்து கோடீஸ்வரர்கள் உருவாகுவது குறித்து தாம்...

நிலக்கரி மோசடிக்கு முழு அமைச்சரவை பொறுப்பேற்க வேண்டும் – SJB

மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி மற்றும் அமைச்சின் செயலாளர்...