தேரர் கொலை சந்தேகநபர் பொலிஸ் துப்பாக்கிச் சுட்டுக்கு பலி

Date:

கம்பஹா, மல்வத்துஹிரிபிட்டிய கஹதான ஸ்ரீ ஞானராம விகாரையில் தங்கியிருந்த 45 வயதுடைய நாமக தேரர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் நேற்று நள்ளிரவு பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக அத்தனகல்ல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.இல. 32, குடபொகுன, காஷ்யபபுர, அரலகங்வில ஆகிய இடங்களில் வசிக்கும் 27 வயதுடைய பெரேடோரபே கல்ஹார டில்ஷான், அத்தனகல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லிஹினியகொல்ல கால்வாய், ஊராபொல, ருவன்வெல்ல வீதிக்கு அருகில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்.கடந்த 10ஆம் திகதி ஹம்பேகமுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக பேலியகொட குற்றத்தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.குற்றப் பிரிவின் அதிகாரிகள், சந்தேக நபரை விசேட விசாரணைக்காக ஊராபொல லிஹினியகொல்ல கால்வாய் பகுதிக்கு அழைத்து வந்த போது, அவர் பொலிஸ் அதிகாரிகளைத் தாக்கி தப்பிச் செல்ல முற்பட்டதாகவும், தப்பிச் செல்ல முயன்ற சந்தேக நபர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாகவும் ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. .காவலில் இருந்து தப்பிச் செல்ல முயன்ற சந்தேக நபரால் தாக்கப்பட்ட பேலியகொட குற்றத்தடுப்பு பிரிவின் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் சிகிச்சைக்காக வட்டுபிட்டியலை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

வெளியானது வெட்டுப்புள்ளி

2025 ஆம் ஆண்டு நடைபெற்ற தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைப்...

இந்திய துணை ஜனாதிபதியுடன் செந்தில் தொண்டமான் சந்திப்பு!

இந்திய துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணனை இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான்...

இன்று நுகேகொடையில் பாரிய பேரணி

பல அரசியல் கட்சிகள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள எதிர்ப்பு பேரணி இன்று...

40 மில்லியன் மதிப்புள்ள “குஷ்” போதைப்பொருள் கடத்திய மூவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அனைத்து சோதனைகளையும் முடித்துவிட்டு, விமான நிலையத்திற்கு வெளியே...