வாகன இறக்குமதிக்கு அனுமதி

Date:

டொலரில் வரி செலுத்தி வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதிக்குமாறு இலங்கை மத்திய வங்கி அரசாங்கத்திற்கு பரிந்துரை செய்துள்ளது.

டொலரில் வரி செலுத்தி வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதித்தால், குறிப்பிட்ட சில நபர்களின் விரைவான டொலர் வரவால் நாட்டில் டொலர் பிரச்சனை தீர்ந்துவிடும் என்று இலங்கை மத்திய வங்கி கூறுகிறது.

இதன்மூலம் வெளிநாட்டில் தொழில்புரிபவர்களுக்கு வாகனத்தை இறக்குமதி செய்வதற்கான சந்தர்ப்பம் கிடைக்குமென இலங்கை மத்திய வங்கி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

எவ்வாறாயினும், நாட்டின் பொருளாதார நிலைமையை கருத்திற்கொண்டு வாகனங்களின் சாதாரண இறக்குமதியை மேலும் ஊக்கப்படுத்த வேண்டும் என இலங்கை மத்திய வங்கி அரசாங்கத்திற்கு பரிந்துரை செய்துள்ளது.

இதேவேளை, ஆடம்பரப் பொருட்களின் இறக்குமதியை நிறுத்துவதற்குப் பதிலாக, அவற்றிற்கு அதிக வரிகளை அறவிடுவதே மிகவும் புத்திசாலித்தனமானது என இலங்கை மத்திய வங்கி அரசாங்கத்திடம் சுட்டிக்காட்டியுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சுரேஷ் சாலேவுக்கு திடீர் மாரடைப்பு

முன்னாள் அரச புலனாய்வு சேவைத் தலைவர் சுரேஷ் சாலே திடீர் மாரடைப்பு...

அரசு ஊழியர்களுக்கு தவணை கட்டண முறையில் 20 கிலோ அரிசி!!

அரசு ஊழியர்களுக்கு தவணை கட்டண முறையின் கீழ் 20 கிலோ அரிசி...

ஜனாதிபதி செயலக சிரேஷ்ட உதவிச் செயலாளர் கைது…!

-போலி கடவுச்சீட்டு தயாரித்த குற்றச்சாட்டு: ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் தொடர்புடைய நபர் ஒருவர்...

சரித் அபேசிங்க மீது SJB எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை

இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஐக்கிய...