சுகாதார சேவையாளர்கள் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை!

Date:

நாளை நடைபெறவுள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டத்திற்கு தாம் பூரண ஆதரவளிப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் நிர்வாகச் செயலாளர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார்.

ஆனால் தற்போதைக்கு தொடர் வேலைநிறுத்தம் நடத்துவதில் உடன்பாடு இல்லை என்றார்.

நாளை எடுக்கப்படும் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பில் ஆட்சியாளர்களின் பதில்களை அளந்து அதன் பின்னர் உரிய நடவடிக்கைகளை எடுப்பது நல்லது.

சுகாதார சேவையில் தொடர்ச்சியான வேலைநிறுத்தத்தை தனது கட்சி விரும்பவில்லை. மக்களையும் போராட்டக்காரர்களையும் மோதலுக்கு தள்ள இதனால் ஆட்சியாளர்களுக்கு நிறைய இடம் கிடைக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்கங்களின் ஒன்றியம் கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இன்று நுகேகொடையில் பாரிய பேரணி

பல அரசியல் கட்சிகள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள எதிர்ப்பு பேரணி இன்று...

40 மில்லியன் மதிப்புள்ள “குஷ்” போதைப்பொருள் கடத்திய மூவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அனைத்து சோதனைகளையும் முடித்துவிட்டு, விமான நிலையத்திற்கு வெளியே...

ரணிலுக்கு எதிராக மேல் நீதிமன்றில் வழக்கு

ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நடத்தும் விசாரணை இறுதிக்...

வங்காள விரிகுடாவில் தாழமுக்க எச்சரிக்கை

நவம்பர் 22 ஆம் திகதியளவில் தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் ஒரு புதிய...