ஆளுநர் செந்தில் அமைச்சர் ஜீவன் பங்கேற்பில் மகாசிவராத்திரி பெருவிழா இறுதி நகர்வலம்!

Date:

தெட்சணகைலாயம் திருக்கோணேஸ்வரம் மாதுறை அம்பாள் உடனுறை கோணேஸ்வரப் பெருமான் திருக்கோயில் மகா சிவராத்திரி பெருவிழாவின் இறுதி நாள் நகர்வலம் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் விசேட பூஜைகளுடன், கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் சிவராத்திரி பெருவிழாவின் இறுதி நகர்வலம் மிக சிறப்பாக நடைபெற்றது.

சிவராத்திரி பெருவிழாவின் இறுதி நகர்வலம் அருள்மிகு பத்தரகாளி அம்பாள் ஆலயத்திலிருந்து கேரளா செண்டை மேளம் முழங்க, பரதநாட்டிய கலைஞர்களின் நடன நிகழ்வு, குதிரையாட்டம், பறவையாட்டம், கோலாட்டம் உட்பட பல்வேறு கலை நிகழ்வுகளுடன் இடம்பெற்ற நகர்வலத்தில் பெருந்திரளான பக்த அடியார்கள் கலந்துக்கொண்டனர்.

அருள்மிகு பத்தரகாளி அம்பாள் ஆலயத்திலிருந்து புறப்பட்ட தேர்பவனியுடன் ஆளுநர் செந்தில் தொண்டமான் நடை பவனியில் கலந்துகொண்டார்.

கோணேஸ்வரரின் இறுதிநாள் நகர்வலத்தில் கலந்துக்கொண்ட பக்தர்களுக்காக ஆளுநரின் ஏற்பாட்டில் தண்ணீர் பந்தல், தேநீர்,பிரசாதங்கள் என்பன வழங்கி வைக்கப்பட்டது.

இப்பெருவிழாவில் தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ஜீவன் தொண்டமான், திருகோணமலை மாவட்ட நலன்புரி அமைப்பின் செயலாளர் குகதாசன், கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர், அரசியல் தலைமைகள், அரச உத்தியோகஸ்தர்கள்,கலைஞர்கள்,சிவில் அமைப்பினர்கள் உட்பட பெருந்திரளான பக்த அடியார்கள் கலந்துக்கொண்டனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இலங்கை மக்களாக நாம் எப்படி மீள்வது! – நளிந்த இந்ததிஸ்ஸ

என் அன்பான சக இலங்கையர்களே, ஒரு சோகம் என்பது நாம் தாங்கிக் கொள்ளும்...

இலங்கையின் கோரிக்கைக்கு IMF முன்னுரிமை

'திட்வா' புயலால் ஏற்பட்ட அழிவைத் தொடர்ந்து ஏற்பட்ட சவால்களை எதிர்கொள்வதற்காக, அவசர...

முட்டை விலை 70 வரை உயரும்

பேரிடர் காரணமாக கால்நடை பண்ணைகளுக்கு ஏற்பட்ட சேதத்துடன், ஒரு முட்டையின் விலை...

தமிழக முதல்வர், மக்களுக்கு இலங்கை மக்கள் சார்பாக செந்தில் தொண்டமான் நன்றி

இலங்கையில் ஏற்பட்ட கடும் வெள்ளப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப்...