உயர்தரம் கற்கும் மாணவன் கிணற்றில் இருந்து சடலமாக மீட்பு

0
276

பொகவந்தலாவ செவ்வகத்தை தோட்டத்தில் கிணறு ஒன்றில் இருந்து பாடசாலை மாணவன் ஒருவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

பொகவந்தலாவ சென்மேரீஸ் மத்திய கல்லூரியில் பழைய மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட கிரிகெட் போட்டியை காணச் சென்று வீடு திரும்புள்ளார்.

இதனையடுத்து, சிறுவனை நீண்ட நேரம் காணவில்லை என உறவினர்கள தேடிய நிலையில் மரக்கறி தோட்டத்தில் உள்ள கிணறு ஒன்றில் சடலமாக கிடப்பதை சிறுவனின் உறவினர்கள் கண்டுள்ளனர்.

பின்னர் சிறுவனை மீட்டு பொகவந்தலாவ மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலமாக மீட்கப்பட்ட சிறுவனின் உதட்டுப் பகுதியில் காயங்கள் காணப்பட்டதோடு இந்த சிறுவன் பொகவந்தலாவ சென்மேரீஸ் மத்திய கல்லூரியில் உயர் தரத்தில் வர்த்தகப் பிரிவில் கல்வி கற்று வருகிறார்.

உயிரிழந்தவர் 18 வயதுடைய பாரதிதர்ஷன் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

சடலம் பொகவந்தலாவ வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட உள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here