பதவிக்காலம் முடிவடையும் உள்ளூராட்சி நிறுவனங்களின் எதிர்கால நடவடிக்கைகள் என்ன?

Date:

மார்ச் 19 அன்று முடிவடைந்த பிறகு அவற்றைப் பராமரிப்பது பற்றி விவாதிக்கிறது

மார்ச் 19 நள்ளிரவுடன் பதவிக்காலம் முடிவடையும் 340 உள்ளூராட்சி நிறுவனங்களின் எதிர்கால நடவடிக்கைகள் மற்றும் பராமரிப்பு குறித்து அரசாங்கம் கலந்துரையாடியுள்ளதாக பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் ஆளுநர்களுடன் அலரி மாளிகையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

ஆளுநர்களான டிக்கிரி கொப்பேகடுவ (சப்ரகமுவ), வசந்த கர்ணகொட (வடமேற்கு), எம்.ஜே.எம். முசம்மில் (ஊவா), மஹிபால ஹேரத் (வடமத்திய), வில்லி கமகே (தெற்கு), லலித் யூ. கமகே (மத்திய), அனுராதா யஹம்பத் (கிழக்கு) ரொஷான் குணதிலக்க (மேற்கு), ஜீவன் தியாகராஜா (வடக்கு), பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க, பொது நிர்வாக செயலாளர் நீல் ஹபுஹின்ன மற்றும் பிரதமரின் சட்ட ஆலோசகர் கலாநிதி ஜயதிஸ்ஸ டி கோஸ்டா ஆகியோர் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டதாக அந்த ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

எரிபொருள் விலை உயர்வு

இன்று (30) நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம்...

கொள்கலன் விடுவிப்பு தொடர்பில் அதிர்ச்சி தகவல்!

சுங்க பரிசோதனையின்றி கொள்கலன் ஏற்றுமதிகளை விடுவிப்பது தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஜனாதிபதியால்...

2 மாதங்களில் 23 பில்லியன் பெறுமதி போதைப் பொருட்கள் கைப்பற்றல்

நீண்ட நாள் மீன்பிடி படகுகள் ஊடாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட 23 பில்லியன்...

இன்றைய வானிலை அறிவிப்பு

இன்றையதினம் (30) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா,...