ஜனாதிபதி தேர்தல் குறித்து ரணில் வெளியிட்டுள்ள தகவல்

Date:

2024ஆம் ஆண்டின் முற்பகுதியில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் தயாராகி வருவதாகவும் அதுவரை எந்தத் தேர்தலையும் நடத்தாது என்றும் அரசாங்க வட்டாரங்களை மேற்கோள்காட்டி வாராந்தப் பத்திரிகைகள் தெரிவிக்கின்றன.

இதன்படி அடுத்த வருட ஆரம்பத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரசாங்க உயர் அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாராளுமன்ற கூட்டத்திலும் ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டத்திலும் அடுத்த வருட முற்பகுதியில் ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகுமாறு ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அப்படியிருந்தும், நடைபெறவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படாது என்று அவர் எங்கும் குறிப்பிடவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும், எண்ணாயிரம் உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகளை கொண்டு உள்ளூராட்சி நிறுவனங்களை நடத்துவது கடினம் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கொள்கலன் விடுவிப்பு தொடர்பில் அதிர்ச்சி தகவல்!

சுங்க பரிசோதனையின்றி கொள்கலன் ஏற்றுமதிகளை விடுவிப்பது தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஜனாதிபதியால்...

2 மாதங்களில் 23 பில்லியன் பெறுமதி போதைப் பொருட்கள் கைப்பற்றல்

நீண்ட நாள் மீன்பிடி படகுகள் ஊடாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட 23 பில்லியன்...

இன்றைய வானிலை அறிவிப்பு

இன்றையதினம் (30) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா,...

குற்றச் செயல்களில் ஈடுபடும் 52 கும்பல் குறித்து தகவல்

இலங்கையில் குற்றச் செயல்களில் ஈடுபடும் 52 கும்பல் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஒரு...