ஜனாதிபதி தேர்தல் குறித்து ரணில் வெளியிட்டுள்ள தகவல்

Date:

2024ஆம் ஆண்டின் முற்பகுதியில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் தயாராகி வருவதாகவும் அதுவரை எந்தத் தேர்தலையும் நடத்தாது என்றும் அரசாங்க வட்டாரங்களை மேற்கோள்காட்டி வாராந்தப் பத்திரிகைகள் தெரிவிக்கின்றன.

இதன்படி அடுத்த வருட ஆரம்பத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரசாங்க உயர் அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாராளுமன்ற கூட்டத்திலும் ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டத்திலும் அடுத்த வருட முற்பகுதியில் ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகுமாறு ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அப்படியிருந்தும், நடைபெறவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படாது என்று அவர் எங்கும் குறிப்பிடவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும், எண்ணாயிரம் உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகளை கொண்டு உள்ளூராட்சி நிறுவனங்களை நடத்துவது கடினம் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

NDB விவகாரம் CID அலசல்!

நம்பகமான தகவல்களின் படி, தேசிய அபிவிருத்தி வங்கி பிஎல்சி (NDB)யில் இடம்பெற்றதாக...

மன்னிப்பே கிடையாது!

தனது சொத்து மற்றும் கடன் அறிக்கைகள் தொடர்பாக பொய்யான செய்திகளை வெளியிட்ட...

குண்டுத் தாக்குதல்கள் கதை பொய்

கொழும்பு உள்ளிட்ட நெரிசலான பகுதிகளில் குண்டுத் தாக்குதல்கள் தொடர்ச்சியாக நடத்தத் தயாராக...

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர கைது

சொக்கா மல்லி என அழைக்கப்படும் இரத்தினபுரி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்...