IMF ஒப்பந்தம் விரைவில் பாராளுமன்றில் சமர்பிப்பு

Date:

சர்வதேச நாணய நிதியம் இலங்கையுடன் செய்து கொண்ட ஒப்பந்தங்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

பல்வேறு கருத்துக்களை வெளியிடும் எதிர்க்கட்சிகளும், கட்சிகளும் அது தொடர்பில் பேசுவதற்கும் மாற்றுக் கருத்துக்களை முன்வைப்பதற்கும் சந்தர்ப்பம் கிடைக்கும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

“சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் அவர்களின் இணையதளங்களில் வெளியிட எங்கள் நாட்டின் தரப்பிலிருந்து நாங்கள் ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ளோம். நம்மிடம் மறைக்க எந்த ரகசியமும் இல்லை. இது குறித்து நாட்டு மக்களிடம் பேச வேண்டும். சர்வதேச நாணய நிதியம் அறிவிக்கப்பட்டவுடன், நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி இந்த ஒப்பந்தங்களை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பார். பெரும்பாலும் அடுத்த வாரம். இதுபற்றி நாடாளுமன்றத்தில் பேசுவதற்கு எதிர்க்கட்சிகளுக்கும், பல்வேறு கருத்துக்களை தெரிவிக்கும் கட்சிகளுக்கும் நல்ல வாய்ப்பு உள்ளது. அவர்களின் மாற்றுக் கருத்துக்களை முன்வைப்பதற்கான தெளிவான சந்தர்ப்பத்தை வழங்க அரசாங்கம் தயாராக உள்ளது” என்றார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இலங்கையின் டொலர் இருப்பு வீழ்ச்சி

இலங்கை மத்திய வங்கியின் வாராந்திர பொருளாதார குறிகாட்டிகள் அறிக்கையின்படி, இலங்கையின் அதிகாரப்பூர்வ...

தேசிய பட்டியல் வெற்றிடம் பூர்த்தி

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பிரதி அமைச்சருமான கலாநிதி ஹர்ஷண சூரியப்பெருமவின் ராஜினாமாவைத்...

லஞ்சம் பெற முயற்சித்த முக்கிய புள்ளி கைது

வர்த்தகர் ஒருவரிடம் இலஞ்சம் பெற்றுள்ள உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் பிரதி ஆணையாளர்...

துமிந்த திசாநாயக்கவுக்கு பிணை இல்லை!

முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க உள்ளிட்ட மூவரை எதிர்வரும் 15 ஆம்...