Monday, May 6, 2024

Latest Posts

எரிபொருள் விலை, மின்சாரக் கட்டணத்தை இப்போது குறைக்கலாம் : சம்பிக்க ஆலோசனை!

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளதால் எரிபொருளின் விலைகள் மற்றும் மின்சார கட்டணங்கள் கணிசமான விகிதத்தில் குறைக்கலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

CEB மற்றும் CPC ஆகியவை இப்போது பாரிய இலாபத்தை ஈட்டுகின்றன. ஆனால், எரிபொருள் மற்றும் நிலக்கரியை இறக்குமதி செய்வதற்கான டெண்டர் நடைமுறை மிகவும் ஊழல் நிறைந்ததாக இருப்பதாகக் கூறுவது வருத்தமளிக்கிறது.

இலங்கை கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறியதாலும், இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் மற்றும் எரிபொருள் நுகர்வு குறைக்கப்பட்டதாலும் அமெரிக்க டொலருக்கான தேவை குறைந்துள்ளதால் ரூபாவுக்கு எதிராக அமெரிக்க டொலரின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

வெளிநாடுகளில் இருந்து பெறப்பட்ட கடன்களை இலங்கை செலுத்த ஆரம்பித்தால், இறக்குமதி கட்டுப்பாடுகளை ரத்து செய்து இறக்குமதியை அனுமதித்தால் டாலர் மீண்டும் உயரும். தற்போது டாலரின் பெறுமதி குறைந்துள்ளதால் எரிபொருளின் விலைகள் மற்றும் மின்சார கட்டணங்களை குறைக்க முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.

N.S

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.