IMF இலங்கைக்கு வழங்கவுள்ள கடனுக்கு இன்றிரவு அங்கீகாரம்!

0
269

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் கடன்திட்டத்தின் முதல் தவணையான 320 மில்லியன் அமெரிக்க டொலர்களை அடுத்த இரண்டு வாரங்களுக்குள் இலங்கை பெற்றுக்கொள்ளலாம் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் செயற்குழு அமெரிக்க நேரப்படி இன்று (20) இரவு 10 மணிக்கு கூடி இலங்கைக்கு வழங்கப்படவுள்ள கடன் தொகை தொடர்பில் தீர்மானம் எடுக்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 4 வருடங்களில் எட்டு தவணைகளாக முழுத் தொகையும் பெற்றுக்கொள்ளப்படும் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

N.S

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here