கோப் குழுவில் இருந்து அனுரகுமாரவும் விலகினார்!

Date:

தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்கவும் பொது நிறுவனங்கள் தொடர்பான குழு அல்லது கோப் குழுவின் உறுப்புரிமையில் இருந்து விலகியுள்ளார்.

அதன்படி கோப் குழுவின் 30 பேரில் இருந்து இதுவரை 10 பேர் விலகியுள்ளனர்.

வசந்த யாப்பா பண்டார மற்றும் துமிந்த திசாநாயக்க ஆகியோரும் இன்று காலை கோப் குழு உறுப்புரிமையிலிருந்து விலகினர்.

அதேநேரம் முன்னதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கீழ் பாராளுமன்றத்திற்கு தெரிவான காமினி வலேபொட, பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் , ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான எரான் விக்கிரமரத்ன, ஹேஷா விதானகே மற்றும் எஸ். எம்.மரிக்கார், பாராளுமன்ற உறுப்பினர் சரித ஹேரத் மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர ஆகியோரும் கோப் குழுவில் இருந்து விலகினர்.

கோப் குழுவின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன நியமைக்கப்பட்டமையை அடுத்து இவ்வாறு அதன் உறுப்பினர்கள் பதவி விலகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

முன்னாள் மூத்த அமைச்சர் இந்த வாரம் கைது!

இந்த வாரம் மற்றொரு முன்னாள் மூத்த அமைச்சர் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவால்...

ரணில் மீண்டும் கைது?

ராஜகிரிய பகுதியில் விவசாய அமைச்சகத்திற்காக பல மாடி கட்டிடத்தை வாடகைக்கு எடுத்ததில்...

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள புதிய அறிக்கை

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, 2025 அக்டோபரில் இலங்கைக்கு...

300 கிலோ ஹெரோயினுடன் இலங்கை மீனவர்கள் கைது

ஹெரோயின் போதைப்பொருள் 300 கிலோவுடன் இலங்கை மீனவர்கள் அறுவர் மாலைதீவு பொலிஸாரால்...