நுரைச்சோலை அனல்மின் நிலையம் பாதிப்பு

Date:

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் பழுதடைந்துள்ள மூன்றாவது ஜெனரேட்டரை மீள ஆரம்பிக்க சுமார் 12 நாட்கள் ஆகும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

அந்த இயந்திரத்தின் கொதிகலனின் நீர் குழாய் வெடித்துள்ளதாக அதன் பொது முகாமையாளர் ரொஹான் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

அதிக வெப்பம் காரணமாக இயந்திரத்தை பழுது பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பொது மேலாளர் குறிப்பிட்டுள்ளார்.

மூன்றாவது ஜெனரேட்டரின் பராமரிப்புப் பணிகளை எதிர்வரும் ஏப்ரல் மாதம் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

மின்சார சபைக்கு சொந்தமான டீசல் மற்றும் எரிபொருள் மின் நிலையங்கள் மூலம் மக்களுக்கு தொடர்ந்து மின்சாரம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்த அமைச்சர், இதன் காரணமாக மின்வெட்டு ஏற்படாது எனவும் தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஊர்காவற்றுறை பிரதேச சபை வரவு செலவு திட்டம் தோல்வி

அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் ஆளுகையில் உள்ள ஊர்காவற்றுறை பிரதேச சபை...

வெளியானது வெட்டுப்புள்ளி

2025 ஆம் ஆண்டு நடைபெற்ற தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைப்...

இந்திய துணை ஜனாதிபதியுடன் செந்தில் தொண்டமான் சந்திப்பு!

இந்திய துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணனை இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான்...

இன்று நுகேகொடையில் பாரிய பேரணி

பல அரசியல் கட்சிகள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள எதிர்ப்பு பேரணி இன்று...