விமான விபத்து தொடர்பில் விசாரணை

0
65

கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் உள்ள இலங்கை விமானப்படையின் இல. 05 தாக்குதல் படைப்பிரிவிற்கு சொந்தமான நியமிக்கப்பட்ட விமானிகளின் மேம்பட்ட பயிற்சிக்காகப் பயன்படுத்தப்படும் K-8 விமானம், இன்று (21) காலை குருநாகல் வாரியபொல பகுதியில் பயிற்சியின்போது விபத்துக்குள்ளானது.

விமானத்தின் 2 விமானிகளும் விமானத்திலிருந்து பாதுகாப்பாக வெளியேறி, குருநாகல் மினுவங்கேட் கல்லூரி வளாகத்தில் பாராசூட்களின் உதவியுடன் தரையிறங்கினர்.

இந்த விமானத்தில் தலைமை பயிற்சி பயிற்றுவிப்பாளர் விமானியும், பயிற்சி விமானி அதிகாரியும் இருந்தனர், மேலும் இந்த அதிகாரிகள் தற்போது குருநாகல் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விமானம் கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் இருந்து காலை 7.27 மணியளவில் புறப்பட்டு, காலை 7.55 மணியளவில் விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தைத் தொடர்ந்து, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்க, விபத்து குறித்து விசாரிக்க 7 பேர் கொண்ட சிறப்பு விசாரணைக் குழுவை நியமித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here