உள்ளூராட்சி தேர்தல் ; தீர்மானமிக்க முடிவை எடுக்க ஏப்ரல் 4இல் கூடும் ஆணைக்குழு!

Date:

உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுப்பதற்காக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்கள் எதிர்வரும் 4ஆம் திகதி கூடவுள்ளனர்.

இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் ஜி.புஞ்சிஹேவா கருத்து வெளியிடுகையில், ​​உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் நீண்ட கலந்துரையாடலை நடத்த வேண்டியுள்ளது எனக் கூறியுள்ளார்.

இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான தபால் மூல வாக்களிக்கும் பணி நேற்று (28) நடைபெறவிருந்த நிலையில், அது காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

பணம் செலுத்தாததால் தபால் ஓட்டுகளை அச்சிடுவதை அரசு அச்சகம் நிறுத்தியதால் தபால் வாக்களிப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அனைத்து பிணைக் கைதிகளையும் விடுவித்தது ஹமாஸ்

கடந்த 2023ஆம் ஆண்டு ஒக்டோபர் 7ஆம் திகதி ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல்...

அரசாங்கத்திற்குள் பிளவேதும் இல்லை

அரசாங்கத்திற்குள் எந்த நெருக்கடியும் இல்லை என்று அமைச்சர் கே.டி. லால் காந்தா...

வீட்டு பயனாளிகளுக்கு தபாலில் அனுப்ப வேண்டிய கடிதத்துக்கு எதற்கு பெருவிழா?

தோட்ட மக்களின் வீடுகளுக்கான உரிமைப் பத்திரங்கள் இதுவரை அஞ்சல் மூலம் அனுப்பப்பட்டுள்ளன,...

அரசுக்கு எதிராக வீதிக்கு இறங்க தயாராகும் சஜித்!

அரசாங்கம் ஏதேனும் வகையில் மின் கட்டணத்தை அதிகரித்தால், வீதியில் இறங்கி அதற்கு...