Saturday, May 4, 2024

Latest Posts

மிரிஹானவில் பாதுகாப்பு படையினர் தயார் நிலையில்!

காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் போராட்டத்தின் முதலாம் ஆண்டு விழாவை முன்னிட்டு மிரிஹானவில் நடத்த திட்டமிட்டுள்ள போராட்டத்தை கட்டுப்படுத்த பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

அப்பகுதியில் ஆயுதப்படைகளும் பாதுகாப்புக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி பதவியிலிருந்து வெளியேற்றி முதலாம் ஆண்டு நிறைவடைந்ததை முன்னிட்டு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குமாறு கோரி காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் போராட்டம் ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

N.S

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.