அனுரவின் அதிரடி சட்டமூலம் ஏப்ரல் 8 ஆம் திகதி வருகிறது

Date:

சட்டவிரோதமாக ஈட்டிய சொத்துக்களை மீட்பதற்கான சட்டமூலம் ஏப்ரல் 8 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

மாத்தறை வெலிப்பிட்டிய பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

“ஒரு அரசாங்கம் ஊழல்வாதிகளை எவ்வாறு தண்டிக்கும், ஒரு அரசாங்கம் குற்றவாளிகளை எவ்வாறு தண்டிக்கும்? அரசாங்கத்தின் வேலை என்ன? அரசாங்கத்திற்கான சில சட்டங்கள் இங்கே. திருடப்பட்ட சொத்துக்களை மீட்பதற்காக 8 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் ஒரு சட்டத்தை இயற்றுவோம். சட்டவிரோதமாக ஈட்டிய சொத்துக்களை பறிமுதல் செய்யும் சட்டம். யாரையும் தனிப்பட்ட முறையில் பழிவாங்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை. இது நமது நாட்டில் சட்டத்தின் ஒழுங்கு, இந்த தாய்நாட்டில் இறையாண்மையை மீண்டும் நிலைநாட்டுவதே எங்கள் எதிர்பார்ப்பு.”

இதன்படி, மோசடி செய்பவர்களுக்கும் ஊழல் செய்பவர்களுக்கும் மீண்டும் நாட்டை ஆட்சி செய்ய வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது என்று ஜனாதிபதி வலியுறுத்தினார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மாகாண சபைத் தேர்தலை நடத்த புதிய சட்டம் அவசியம் – சட்டமா அதிபர் திணைக்களம்

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு பாராளுமன்றம் புதிய சட்டங்களை நிறைவேற்ற வேண்டும்...

நீரில் மூழ்கி 2 யுவதிகள் உட்பட மூவர் பலி

நொச்சியாகம- தழுவ முகத்துவாரப் பகுதியில் நீராடச் சென்ற இரு இளம் பெண்கள்...

பிரதேச சபை உறுப்பினர்கள் 5 பேர் SJB கட்சியிலிருந்து நீக்கம்

களுத்துறை மாவட்டத்தின் புலத்சிங்கள பிரதேச சபையை பிரதிநிதித்துவப்படுத்திய SJB உறுப்பினர்கள் ஐவர்...

கம்மன்பில கருத்துக்கு பொலீசார் பதில்

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது...