ரஷ்ய மற்றும் உக்ரேன் படைகளுடன் இணைய வேண்டாம் – பாதுகாப்பு அமைச்சு

0
193

சட்டவிரோதமான முறையில் ரஷ்ய மற்றும் உக்ரைன் படைகளுடன் இணைய வேண்டாம் என அனைத்து ஆயுதப்படை உறுப்பினர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன் ரஷ்ய மற்றும் உக்ரேன் படைகளுடன் இந்நாட்டின் பாதுகாப்புப் படையைச் சேர்ந்தவர்கள் இணையவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ள நிலையில் பாதுகாப்பு அமைச்சுக்கு இது தொடர்பில் எவ்வித தொடர்பும் இல்லை எனவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

ரஷ்ய மற்றும் உக்ரேன் இராணுவத்திற்கு சேவையாற்றுவதற்கு இலங்கை இராணுவத்தினரை அனுப்புவதற்கு இலங்கை இராணுவத்திற்கும் ரஷ்ய இராணுவத்திற்கும் இடையில் எவ்வித உடன்பாடும் ஏற்படாத பின்னணியில் இவ்வாறான சம்பவங்கள் நாட்டின் நற்பெயருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here