ஊரடங்கினால் பரீட்சைகள் நிறுத்தம்

0
244

ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டதன் காரணமாக 2021 (2022) க.பொ.த உயர்தர பரீட்சையின் இசை மற்றும் நடன பாடங்களுக்கான நடைமுறைப் பரீட்சை இன்று (3) நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, உள்ளூர் மற்றும் சர்வதேச நடனம், அழகியல் மற்றும் மேற்கத்திய இசை மற்றும் கர்நாடக இசை பாடங்களுக்கான நடைமுறை பரீட்சைகள் திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கப்படும் என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

எனவே, இன்று நடைபெற இருந்த நடைமுறைப் பரீட்சை திங்கட்கிழமையே நடைபெறும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here