அவுஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர் கசண்ட்ராவுடன் இலங்கை உயர்ஸ்தானிகர் சந்திப்பு

Date:

அவுஸ்திரேலியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் சித்ராங்கனி வாகீஸ்வர, அவுஸ்திரேலியாவின் பெடரல் (Federal) நாடாளுமன்ற உறுப்பினர் கசண்ட்ரா பெர்னாண்டோவை (Cassandra Fernando) சந்தித்தார்.

கடந்த வருடம் பெடரல் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட எம்.பியான கசண்ட்ரா பெர்னாண்டோவிற்கு வாழ்த்து தெரிவித்த உயர்ஸ்தானிகர், இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட அவுஸ்திரேலியரை அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் வைத்திருப்பதில் இலங்கை மகிழ்ச்சியும் பெருமையும் அடைவதாகவும் தெரிவித்தார்.

உயர்ஸ்தானிகர் வாகீஸ்வரா மற்றும் கசண்ட்ரா பெர்னாண்டோ ஆகியோர் இலங்கையின் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார முன்னேற்றங்கள் குறித்து கலந்துரையாடியதுடன் அவுஸ்திரேலியா – இலங்கை உறவுகள் தொடர்பில் கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர். இரு நாடுகளுக்கும் இடையிலான தொடர்புகளை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகளை ஆராயவும் ஆலோசித்துள்ளனர்.

உயர்ஸ்தானிகருடன் பிரதி உயர்ஸ்தானிகர் சாமரி ரொட்ரிகோவும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஐஸ் தயாரிக்க பயன்படும் மேலும் ஒரு தொகை ரசாயனங்கள் மீட்பு

'ஐஸ்' என்ற போதைப்பொருளை தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஒரு தொகை ரசாயனங்களை...

வானில் இன்று அரிய வகை இரத்த நிலவ!

இன்றைய (7) தினம் வானில் அரிய வகை முழு சந்திரகிரகணம் தென்படவுள்ளது. இரத்த...

சஷீந்திர சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதி

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ சிறைச்சாலை மருத்துவமனையில்...

கொழும்பில் இரண்டு துப்பாக்கிச் சூடு, ஒருவர் பலி

கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியில் நேற்று (05) இரவு 11.45 மணியளவில் நடந்த...