நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிக்க அனைத்து கட்சிகளுக்கும் சஜித் அழைப்பு

Date:

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒரு வாரத்திற்குள் ஒழிப்பதற்கு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றிணைய வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று அழைப்பு விடுத்துள்ளார்.

இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய பிரேமதாச, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

“இந்த வாரத்திற்குள் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிக்கும் முறையை நாம் கொண்டு வர முடியும், ஆனால் நிறைவேற்றுப் பிரதமரையும் அனுமதிக்க முடியாது என்று சஜித் கூறினார்.

தனது SJB கட்சி தற்காலிக மற்றும் சந்தர்ப்பவாத அமைச்சுப் பதவிகளை ஏற்காது எ சஜித் மேலும் தெரிவித்தார்.

“நாங்கள் ஆட்சிக்கு வந்தால், அது மக்களின் ஆசியுடன்” என்று அவர் மேலும் கூறினார்.

தெருக்களில் இருந்து கேட்கும் குரலைத் தவிர, நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பக் கூடாது என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

“மக்கள் அரசாங்கத்தில் மாற்றத்தை விரும்புகிறார்கள், அதை பாராளுமன்றம் புரிந்து கொள்ள வேண்டும்” என்று அவர் வலியுறுத்தினார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தமிழக மீனவர்கள் 7 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு 400-க்கும் மேற்பட்ட...

பஸ் கட்டண திருத்தம்?

எரிபொருள் விலை திருத்தத்துடன் பஸ் கட்டண திருத்தம் தொடர்பாக அடுத்த 2...

கஹாவத்தை துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

கஹவத்த பகுதியில் நேற்று இரவு (30) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...

எரிபொருள் விலை உயர்வு

இன்று (30) நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம்...