இன்று மாலையும் மழை

0
59
34839005 - water droplets falling into the hand

மேல், சப்ரகமுவ, தென், ஊவா, மத்திய, வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களில் இன்று (07) மாலை அல்லது இரவு வேளையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மன்னார் மாவட்டத்திலும் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்யக்கூடும்.

இவற்றில் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழை தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் மக்களை கேட்டுக்கொள்கிறது.

மேலும், சூரியன் வடக்கு நோக்கி நகரும் போது கொரலவெல்ல, இங்கிரிய, கிரியெல்ல, அம்குதெனிய, ஹல்துமுல்ல, ரத்மல்வெஹெர, வரதெனிய ஆகிய பிரதேசங்களில் இன்று மதியம் 12.13 மணிக்கு சூரியன் உச்சம் கொடுக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here