புலம்பெயர் தொழிலாளர்களால் நாட்டுக்கு அனுப்பப்படும் பணம் அதிகரிப்பு!

Date:

வௌிநாட்டில் தொழில் புரியும் இலங்கையர்களால் நாட்டுக்கு அனுப்பப்படும் டொலர்களின் தொகை அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

2023ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் மாத்திரம் 568.3 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வௌிநாட்டு வாழ் இலங்கையர்களால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இது மார்ச் 2022இல் 318.4 மில்லியன் அமெரிக்க டொலர்களாக காணப்பட்டது.

2022ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் வௌிநாட்டு வாழ் இலங்கையர்கள் மூலம் 782.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நாட்டுக்கு கிடைத்த நிலையில் 2023ஆம் ஆண்டு முதல் மூன்று மாதங்களில் அந்த தொகை 1413.2 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதென மத்திய வங்கி கூறியுள்ளது.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கொள்கலன் விடுவிப்பு தொடர்பில் அதிர்ச்சி தகவல்!

சுங்க பரிசோதனையின்றி கொள்கலன் ஏற்றுமதிகளை விடுவிப்பது தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஜனாதிபதியால்...

2 மாதங்களில் 23 பில்லியன் பெறுமதி போதைப் பொருட்கள் கைப்பற்றல்

நீண்ட நாள் மீன்பிடி படகுகள் ஊடாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட 23 பில்லியன்...

இன்றைய வானிலை அறிவிப்பு

இன்றையதினம் (30) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா,...

குற்றச் செயல்களில் ஈடுபடும் 52 கும்பல் குறித்து தகவல்

இலங்கையில் குற்றச் செயல்களில் ஈடுபடும் 52 கும்பல் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஒரு...