புத்தாண்டு காலத்தில் 7,000 பேருந்துகள் இயக்கப்படும்; தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவிப்பு!

Date:

புத்தாண்டு காலத்தில் மக்களுக்கான போக்குவரத்து வசதிகளை வழங்குவதற்கு விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (NTC) தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 18 (செவ்வாய்கிழமை) வரை பொதுப் போக்குவரத்திற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் இயக்குநர் ஜெனரல் நிலான் மிராண்டா தெரிவித்துள்ளார்.

இந்த சிறப்பு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் ஏப்ரல் 15ஆம் திகதி வரை கொழும்பில் இருந்து பிற மாகாணங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படும். இதே திட்டத்தின் கீழ் ஏப்ரல் 15 முதல் ஏப்ரல் 18 வரை பயணிகள் அந்தந்த இடங்களிலிருந்து கொழும்புக்குத் திரும்புவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. 7,000 பேருந்துகள் இந்த காலப்பகுதியில் இயக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் தனியார் பேருந்துகளும் அதிகமாக சேவையில் ஈடுபடும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தாய்லாந்தில் கைதான முக்கிய புள்ளி

குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் குழு, தாய்லாந்தில் சமூக ஊடக ஆர்வலர்...

ஹொரணையில் ஒருவர் சுட்டுக் கொலை

ஹொரணை, 12 ஏக்கர்ஸ், சிரில்டன் வட்ட பகுதியில் நேற்று (02) இரவு...

வத்திக்கான் வெளியுறவு அமைச்சர் இலங்கை வருகிறார்

வத்திக்கான்  வெளியுறவு அமைச்சர் பேராயர் பால் ரிச்சர்ட் கல்லாகர்  எதிர்வரும் நவம்பர்...

பத்மேவுடன் தொடர்பு – ஐந்து நடிகைகளுக்கு சிக்கல்

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள பிரதான சந்தேகநபரான கெஹெல்பததர பத்மே உடன் வெளிநாடுகளுக்குச்...