ஆட்சி பொறுப்பை ஏற்க தயார்- சஜித் பிரேமதாச

0
213

ஆட்சி பொறுப்பை ஏற்க தான் தயாராக இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்றைய தினம் நாடாளுமன்றில் அறிவித்துள்ளார்

எனினும் அவ்வாறு தான் ஆட்சி பொறுப்பை ஏற்க வேண்டுமாயின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை முழுமையாக நீக்கப்பட வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதனை நீக்க வேண்டியது அவசியமாகும். அவ்வாறானதொரு அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் கீழ் தற்காலிக அரசாங்கமோ இடைக்கால அரசாங்கமோ கொண்டு செல்ல முடியாது.

ராஜபக்சர்களின் தலைமைத்துவம் அல்லது அவர்களுடன் தொடர்புடையோர் இந்த செயற்பாடுகளிலிருந்து விலகி இருப்பார்களாயின் நாம் பேச்சுவார்த்தைக்கு தயார்.

இந்த நாட்டு மக்கள் மோசமான வகையில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த பாதிப்பிலிருந்த அவர்களை துரிதமாக மீட்டெடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here