சுதந்திரக்கட்சி மீண்டும் கட்டியெழுப்பப்படும் – மஹிந்த அமரவீர

Date:

”அரசாங்க அதிகாரத்தை கைப்பற்றும் கட்சியாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மீண்டும் கட்டியெழுப்பப்படும்” என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை தொடர்ந்தும் பலப்படுத்தும் நடவடிக்கையை நாம் மேற்கொண்டு வருகின்றோம். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி இன்று பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது அதனாலேயே கட்சியை நாம் மீளபொறுப்பேற்றோம். அரசாங்க அதிகாரத்தை கைப்பற்றும் கட்சியாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மீண்டும் கட்டியெழுப்பப்படும்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஸ்தாபிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் அங்கத்தவர்களாகக் காணப்பட்டனர். ஆனால் இன்று ஒருரிரு உறுப்பினர்களே உள்ளனர்.சந்திரிக்கான பண்டார நாயக்கவின் வழிகாட்டலில் மீண்டும் இந்த கட்சியை நாம் கட்டியெழுப்புவோம்” இவ்வாறு மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

வெளியானது வெட்டுப்புள்ளி

2025 ஆம் ஆண்டு நடைபெற்ற தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைப்...

இந்திய துணை ஜனாதிபதியுடன் செந்தில் தொண்டமான் சந்திப்பு!

இந்திய துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணனை இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான்...

இன்று நுகேகொடையில் பாரிய பேரணி

பல அரசியல் கட்சிகள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள எதிர்ப்பு பேரணி இன்று...

40 மில்லியன் மதிப்புள்ள “குஷ்” போதைப்பொருள் கடத்திய மூவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அனைத்து சோதனைகளையும் முடித்துவிட்டு, விமான நிலையத்திற்கு வெளியே...