ஜனாதிபதி வேட்பாளருக்கான பிணை வைப்பு கட்டணம் 26 இலட்சம்

Date:

தேர்தல்களுக்கான பிணை வைப்பு கட்டணத்தை திருத்துவதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல் மற்றும் மாகாண சபைகள் சட்ட விதிகளின்படி, தற்போதைய பொருளாதாரப் பின்னணிக்கு ஏற்றவாறு பிணை வைப்பு கட்டணத்தில் திருத்தம் செய்ய அமைச்சரவை அங்கீகரித்துள்ளது.

இதன்படி, சம்பந்தப்பட்ட பிணை வைப்பு கட்டண திருத்துவதற்கான சட்டமூலத்தை தயாரிப்பதற்காக ஜனாதிபதி மற்றும் நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

கட்சி ஒன்றிலிருந்து ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரின் பிணை வைப்புத்தொகை 26 இலட்சமாகவும், சுயேட்சையாக ஜனாதிபதி வேட்பாளருக்கு 31 இலட்சம் ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றத் தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி ஒன்றின் வேட்பாளரின் பிணை வைப்புத் தொகை 11,000 ரூபாவாகவும், சுயேட்சை வேட்பாளரின் பிணை வைப்புத் தொகை 16,000 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மாகாண சபைத் தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி ஒன்றின் வேட்பாளரின் பிணை வைப்புத் தொகை 6,000 ரூபாவாகவும், சுயேட்சை வேட்பாளரின் பிணை வைப்புத் தொகை 11,000 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சம்பத் வங்கி பற்றிய சந்தேகங்கள் அதிகரிப்பு!

இலங்கையின் வங்கித் துறையில் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ள ரூ. 13.5 பில்லியன்...

இந்திய துணை ஜனாதிபதி நாளை மறுநாள் இலங்கை வருகிறார்

இந்திய துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் 2 நாள் அரசு முறை பயணமாக...

நாட்டில் இன்று வெப்பம் அதிகரிக்கும்

நாட்டில் இன்று (17) வெப்பத்தின் அளவு எச்சரிக்கை மட்டம் வரை அதிகரிக்கக்கூடும்...

400 கோடி பெறுமதி ஹெரோயின் மீட்பு

போதைப்பொருள் கடத்தப்பட்ட நிலையில் கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்ட நெடுநாள் மீன்பிடி படகில், 400...