ஜனாதிபதி வேட்பாளருக்கான பிணை வைப்பு கட்டணம் 26 இலட்சம்

Date:

தேர்தல்களுக்கான பிணை வைப்பு கட்டணத்தை திருத்துவதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல் மற்றும் மாகாண சபைகள் சட்ட விதிகளின்படி, தற்போதைய பொருளாதாரப் பின்னணிக்கு ஏற்றவாறு பிணை வைப்பு கட்டணத்தில் திருத்தம் செய்ய அமைச்சரவை அங்கீகரித்துள்ளது.

இதன்படி, சம்பந்தப்பட்ட பிணை வைப்பு கட்டண திருத்துவதற்கான சட்டமூலத்தை தயாரிப்பதற்காக ஜனாதிபதி மற்றும் நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

கட்சி ஒன்றிலிருந்து ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரின் பிணை வைப்புத்தொகை 26 இலட்சமாகவும், சுயேட்சையாக ஜனாதிபதி வேட்பாளருக்கு 31 இலட்சம் ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றத் தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி ஒன்றின் வேட்பாளரின் பிணை வைப்புத் தொகை 11,000 ரூபாவாகவும், சுயேட்சை வேட்பாளரின் பிணை வைப்புத் தொகை 16,000 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மாகாண சபைத் தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி ஒன்றின் வேட்பாளரின் பிணை வைப்புத் தொகை 6,000 ரூபாவாகவும், சுயேட்சை வேட்பாளரின் பிணை வைப்புத் தொகை 11,000 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

வெளியானது வெட்டுப்புள்ளி

2025 ஆம் ஆண்டு நடைபெற்ற தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைப்...

இந்திய துணை ஜனாதிபதியுடன் செந்தில் தொண்டமான் சந்திப்பு!

இந்திய துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணனை இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான்...

இன்று நுகேகொடையில் பாரிய பேரணி

பல அரசியல் கட்சிகள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள எதிர்ப்பு பேரணி இன்று...

40 மில்லியன் மதிப்புள்ள “குஷ்” போதைப்பொருள் கடத்திய மூவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அனைத்து சோதனைகளையும் முடித்துவிட்டு, விமான நிலையத்திற்கு வெளியே...