புத்தாண்டை முன்னிட்டு அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு

Date:

எதிர்வரும் புதுவருடத்தை முன்னிட்டு லங்கா சதொச நிறுவனம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் பல அத்தியாவசிய பொருட்களின் விலைகளைக் குறைத்துள்ளது.

அதன்படி நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த விலைகளை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஒரு கிலோ காய்ந்த மிளகாய் 300 ரூபாவினால் குறைத்து புதிய விலை 850 ரூபாவாகும்.

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ வெங்காயத்தின் விலை 120 ரூபாவினால் குறைத்து அதன் புதிய விலை 375 ரூபாவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் இந்தியா மற்றும் பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வெங்காயத்தின் விலை 50 ரூபாவினால் குறைத்து அதன் புதிய விலை 445 ரூபாவாகும்.

ஒரு கிலோ வெள்ளை பூண்டு 15 ரூபாவினால் குறைத்து அதன் புதிய விலை 680 ரூபாவாக பதிவாகியுள்ளது.

ஒரு கிலோ உருளைக்கிழங்கு 10 ரூபாவினால் குறைத்து அதன் புதிய விலை 165 ரூபாவாகும்.

அத்துடன் சிகப்பு பருப்பின் விலையை 7 ரூபாவினாலும் வெள்ளை அரிசியின் விலையை 3 ரூபாவினாலும் குறைக்க லங்கா சதொச தீர்மானித்துள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சஜித்தின் இந்திய பயணம் குறித்து கட்சிக்கே தெரியாது!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் இந்திய பயணம் குறித்து தானோ அல்லது...

நாட்டில் பலர் கைது

பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட நடவடிக்கைகளின் கீழ் நேற்றும் (10) பலர்...

முன்னாள் மூத்த அமைச்சர் இந்த வாரம் கைது!

இந்த வாரம் மற்றொரு முன்னாள் மூத்த அமைச்சர் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவால்...

ரணில் மீண்டும் கைது?

ராஜகிரிய பகுதியில் விவசாய அமைச்சகத்திற்காக பல மாடி கட்டிடத்தை வாடகைக்கு எடுத்ததில்...