அடுத்த பொது வேட்பாளர் சஜித் ; ஐ.தே.கவுக்கும் அழைப்பு!

Date:

ஐக்கிய மக்கள் சக்தி எதிர்வரும் தேர்தல்களில் போட்டியிட பரந்தப்பட்ட கூட்டணியொன்றை அமைக்கும் முனைப்பில் ஈடுபட்டுள்ளதால் ஐக்கிய தேசிய கட்சியும் எம்முடன் இணைந்துகொள்ள வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

“எதிர்வரும் தேர்தல்களில் அமைக்கப்படும் புதிய கூட்டணியானது ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான கூட்டணியாகவே இருக்கும். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் ஐக்கிய தேசிய கட்சியும் இந்தக் கூட்டணியில் இணையலாம். ஐக்கிய தேசியக் கட்சியானது கூட்டணியில் ஒரு சிறிய கட்சியாக இணைய முடியும். ஐக்கிய தேசியக் கட்சியானது தற்போது ஒரு சிறிய கட்சியாகும். ஏனெனில் அக்கட்சிக்கு உள்ள வாக்கு சதவீதம் மிகக்குறைவாகும்.

எமது பாரிய கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இருப்பார்” – எனவும் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் 17 வயது சிறுவன் பலி

பொலிஸாரின் கட்டளையை மீறித் தப்பிச் செல்ல முயன்ற வேன் ஒன்றை நிறுத்துவதற்காகப்...

சபாநாயகர் மீதான முறைப்பாட்டை விசாரிக்க லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தீர்மானம்

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக அளிக்கப்பட்டுள்ள புகாரை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள லஞ்சம்...

ஐக்கிய மக்கள் சக்திக்கு 06 வயது

ஐக்கிய மக்கள் சக்தி ஸ்தாபிக்கப்பட்டு 6 வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு நாட்டு...

விபத்தில் மூவர் பலி

தல்துவ - அமிதிரிகல பகுதியில் கார் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும்...