அடுத்த பொது வேட்பாளர் சஜித் ; ஐ.தே.கவுக்கும் அழைப்பு!

Date:

ஐக்கிய மக்கள் சக்தி எதிர்வரும் தேர்தல்களில் போட்டியிட பரந்தப்பட்ட கூட்டணியொன்றை அமைக்கும் முனைப்பில் ஈடுபட்டுள்ளதால் ஐக்கிய தேசிய கட்சியும் எம்முடன் இணைந்துகொள்ள வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

“எதிர்வரும் தேர்தல்களில் அமைக்கப்படும் புதிய கூட்டணியானது ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான கூட்டணியாகவே இருக்கும். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் ஐக்கிய தேசிய கட்சியும் இந்தக் கூட்டணியில் இணையலாம். ஐக்கிய தேசியக் கட்சியானது கூட்டணியில் ஒரு சிறிய கட்சியாக இணைய முடியும். ஐக்கிய தேசியக் கட்சியானது தற்போது ஒரு சிறிய கட்சியாகும். ஏனெனில் அக்கட்சிக்கு உள்ள வாக்கு சதவீதம் மிகக்குறைவாகும்.

எமது பாரிய கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இருப்பார்” – எனவும் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நேபாள போராட்டக் குழுவிடம் இருந்து பல உயிர்களை காப்பாற்றிய செந்தில் தொண்டமானின் வீர தீர செயல்! 

அண்மையில் நேபாளத்தில் இடம்பெற்ற அமைதியின்மை மற்றும் போராட்டம் காரணமாக அங்கு பல...

பரீட்சை திகதிகள் அறிவிப்பு

2026 ஆம் ஆண்டில் பாடசாலை மாணவர்களுக்கு இடம்பெறவுள்ள பரீட்சைகள் குறித்து கல்வி...

பலாங்கொடையில் காட்டுத் தீ

பலாங்கொடை நொன்பெரியலில் உள்ள நெக்ராக் வத்த அருகே உள்ள கோம்மொல்லி பாலத்துடு...

நேபாள் அரசுக்கு நேர்ந்த கதி NPP அரசுக்கும்

கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நிர்மல் ரஞ்சித் தேவசிறி கூறுகையில், தற்போதைய தேசிய...