ஜனாதிபதியின் சிறந்த நடவடிக்கைகளால் நாடு முன்னோக்கிச் செல்கின்றது!

Date:

“கடந்த வருட ஆரம்பத்தில் வீழ்ச்சியடைந்திருந்த இலங்கை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சிறந்த நடவடிக்கைகளால் இந்த வருடம் முன்னோக்கிச் செல்கின்றது. இந்நிலையில், எமது நாட்டைப் பின்னோக்கி நகர்த்த எவரும் சதி செய்யக்கூடாது என்று விநயமாகக் கேட்டுக்கொள்கின்றேன்.”

  • இவ்வாறு போக்குவரத்து மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.

“நாடு மீதும் மக்கள் மீதும் அக்கறை உள்ளவர்கள் சதி முயற்சிகளுக்குத் துணைபோகமாட்டார்கள்” என்றும் அவர் குறிப்பிட்டார்

இந்தியக் கடன் உதவியின் கீழ் இலங்கைக்குப் பெற்றுக்கொள்ளப்பட்ட 26 புதிய பஸ்களை கண்டி மாவட்டத்தில் உள்ள இலங்கை போக்குவரத்துச் சபையின் டிப்போக்களுக்குக் கையளிக்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

“கடந்த வருடத்தை விட இந்த வருடம் புத்தாண்டு மிகவும் சுபமானதாக அமைந்திருக்கின்றது. அடுத்த வருடத்தை இன்னும் சிறப்பாக மாற்ற வேண்டிய பாரிய பொறுப்பு முழு இலங்கை மக்களுக்கும் இருக்கின்றது” – என்றும் அவர் மேலும் கூறினார்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அடுத்த தேர்தலுக்கு முன் எதிர்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் சிறையில்

அடுத்த தேர்தல் நடைபெறும் நேரத்தில், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த அனைத்து அரசியல்வாதிகளும் சிறையில்...

சீனி ஊழல் முடிவுக்கு வந்தது

2020 ஒக்டோபரில் சீனி மீதான ஐம்பது ரூபாய் வரியை 25 சதங்களாக...

யாழ் மாநகரின் முதல்வராக மதிவதனி தெரிவு

யாழ் மாநகர சபையின் முதல்வராக மதிவதனி விவேகானந்தராஜா 19 வாக்குகளை பெற்று...

நாமல் – சஜித் அணி இணைந்து பிடித்த ஆட்சி

உடபத்தாவ பிரதேச சபையில் அதிகாரத்தை நிறுவுவது தொடர்பான வாக்கெடுப்பு நேற்று (ஜூன்...