Saturday, July 27, 2024

Latest Posts

ராஜிதவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை ; ஐ.ம.ச. தீர்மானம்!

பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பது குறித்து ஆராய்வதற்காக குழுவொன்றை நியமிக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளதாக அதன் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் சேனாரத்ன ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து விரைவில் நீக்கப்படுவார் என வெளியான தகவல்களுக்கு பதிலளிக்கும் வகையிலேயே மத்தும பண்டார இதனைத் தெரிவித்துள்ளார்.

ராஜித சேனாரத்னவை ஐக்கிய மக்கள் சக்தியில் வைத்திருப்பதில் எந்தப் பயனும் இல்லை. கட்சிக்கு எதிராக செயற்படும் அனைவருக்கும் எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

N.S

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.