முதலில் விருப்பம் தெரிவித்த டலஸ் பின்னர் பிரதமர் பதவியை ஏற்க மறுத்தார்!

Date:

ஆளும் கட்சியில் இருந்து வெளியேறும் சுயேச்சை உறுப்பினர்கள் குழுவின் பிரேரணையின் பிரகாரம் நேற்று (09) வரை பிரதமர் பதவியை ஏற்க டலஸ் அழகப்பெரும விருப்பம் தெரிவித்திருந்த போதிலும், இன்று அவர் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, மைத்திரிபால சிறிசேன, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட 41 சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சிறிய கட்சி கூட்டமைப்பினரின் விசேட கூட்டம் இன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த குழுவினர் இன்று இரவு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவையும் சந்திக்க உள்ளனர்.

மகிந்த ராஜபக்சவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கி புதிய பிரதமரின் கீழ் இடைக்கால அரசாங்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாகும்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ரணில் பிணையில் விடுதலை!

பொது சொத்துரிமைச் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில்...

ரணில் ஆதரவு போராட்டத்தில் அனுர கோ ஹோம் கோஷம்!

கொழும்பு தேசிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள்...

ரணிலுக்கு பிணை வழங்க கடும் எதிர்ப்பு

பொது சொத்து சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில்...

ரணிலுக்கு ஆதரவாக குவிந்துள்ள சட்டத்தரணிகள்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வழக்கு விசாரணையில் தங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக, நீதியும்...