காலியில் துப்பாக்கிச் சூடு, ஒருவர் பலி

Date:

காலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தடல்ல பகுதியில் நேற்று (ஏப்ரல் 15) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்துள்ளதுடன் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இறந்தவர் 36 வயதுடையவர் மற்றும் காயமடைந்தவர் 18 வயதுடையவர். இவர் தடல்ல பகுதியைச் சேர்ந்தவர்.

தடல்லா பகுதியில் நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டத்திற்குப் பிறகு, இரவு நேரத்தில் நடைபெற்ற டி.ஜே. இசை பார்த்துக் கொண்டிருந்தவர்களை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இரண்டு சந்தேகநபர்கள் துப்பாக்கிச் சூட்டுக்கு வந்துள்ளதாகவும், உயிரிழந்த சந்தேகநபர்களுக்கு இடையில் சட்டவிரோத மதுபான வியாபாரம் தொடர்பில் நீண்டகாலமாக நிலவி வந்த பகைமையினால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்களில் ஒருவர் உயிரிழந்தவரின் உறவினர் என்பதுடன் சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை காலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அரசின் புதிய வரிக் கொள்கை ஜனநாயகத்திற்கு விழுந்த கொடிய அடி – எதிர்க்கட்சித் தலைவர்

தற்போதைய அரசு சர்வதேச நாணய நிதியத்தின் இலக்குகளை மீறிச் செல்ல ஆர்வம்...

நாட்டில் இன்றும் மழை

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் காலி மற்றும்...

டொலர் உயர்வுக்கும் அரசுக்கும் தொடர்பில்லை

தற்போது இலங்கையில் அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்து வருவது, அரசாங்க நிர்வாகத்...

வெளிவிவகார அமைச்சின் மின்னணு ஆவணச் சேவை முடக்கம்

வெளிவிவகார அமைச்சின் மின்னணு ஆவணச் சான்றளிப்பு முறைமையில் (e-DAS) ஏற்பட்டுள்ள அவசர...