டொரின்டன் அக்ரல்பெத்தை தாக்குதலில் நவராஜ், கண்ணா உள்ளிட்ட 18 பேர் கைது

Date:

அக்கரப்பத்தனை டொரின்டன் அக்ரல்பெத்தை தோட்டத்தில் இரு குழுக்களிடையே நடைபெற்ற மோதலுடன் தொடர்புடைய 18 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று இரவு இடம்பெற்ற மோதலில் சிறுவர்கள் உட்பட பத்திற்கும் மேற்ப்பட்டோர் காயமடைந்தனர்.

காட்டுமாரியம்மன் கோவில் பூஜை குழு மற்றும் பிள்ளையார் கோவில் பூஜை குழு என இருவேறு தரப்பினர் அன்னதானம் மேற்கொண்ட விளைவாக தாக்குதல் இடம்பெற்றதாக கூறப்படுகிறது.

சம்பவத்தில் வெட்டுகாயத்திற்கு இலக்கான நபர் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதுடன், சிறுவர் ஒருவர் அக்கரப்பத்தனை பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றார்.

ஏனையோர் சிகிச்சையளிக்கப்பட்டு வீடு திரும்பியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தில் பாதிக்கப்பட்ட தரப்பினர்கள் அக்கரப்பத்தனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்ததை அடுத்து இரண்டு பிரதான அரசியல் கட்சிகளின் அமைப்பாளர்கள் என அறியப்படும் நவராஜ் மற்றும் கண்ணா உள்ளிட்ட 18 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பெருந்தோட்ட வன்தாக்குதல் புதனன்று பல்தரப்பு மாநாடு – மனோவின் முயற்சிக்கு வெற்றி

பெருந்தோட்ட வாழ் மக்கள் மீது அதிகரித்து வரும் வன்முறைகளை எதிர்கொள்ள, சகல...

வாகன இறக்குமதி வரி 50% உயர்வு

இலங்கையில் தெரிவுசெய்யப்பட்ட சில மோட்டார் வாகனங்களின் இறக்குமதிக்கு விதிக்கப்படும் சுங்க இறக்குமதி...

கண்டி சம்பவம் குறித்து சம்பத் வங்கி விசேட அறிக்கை!

கண்டி தலதா வீதியில் அமைந்துள்ள அதன் கிளை மற்றும் அங்குள்ள அதிகாரிகள்...

ஹூணுபிட்டி ரயில் விபத்தில் 12 பயணிகள் காயம்

இன்று (16) அதிகாலை வனவாஸல மற்றும் ஹூணுபிட்டிய இடையே ரயில் மார்க்கத்தில்...