சுதந்திரக் கட்சி விவகாரம் – தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அதிகாரமில்லை

Date:

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் நிலவும் உள்ளக பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தமது ஆணைக்குழுவுக்கு சட்டரீதியான அதிகாரம் இல்லை என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அக்கட்சியின் அரசியல் குழுவினால் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்ட தீர்மானங்கள் மற்றும் ஆவணங்கள் தொடர்பாக அதன் உறுப்பினர்களால் நேற்று கலந்துரையாடப்பட்ட போதே இந்ந விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிமல் சிறிபால டி சில்வா தலைமையிலான சுதந்திரக் கட்சியின் குழுவொன்று, நிர்வாக சபைக் கூட்டத்தை கூட்டி, பதில் செயலாளர், தேசிய அமைப்பாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு உறுப்பினர்களை நியமித்துள்ளது.

அதன்படி, பதில் தலைவராக நிமல் சிறிபாலடி சில்வா தெரிவு செய்யப்பட்டார்.

இதையடுத்து, இதன்போது எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவிடமும் கையளிக்கப்பட்டது.

எனினும், இந்நியமனம் சட்டவிரோதம் என மைத்திரி தரப்பு விளக்கமளித்துள்ளது.

இந்த நிலையிலேயே கட்சி யாப்பின் அடிப்படையில் புதிய நியமனம் செல்லுபடியாகுமா, தேர்தல்கள் ஆணைக்குழு எந்த தரப்புடன் அதிகாரப்பூர்வமாக தொடர்புகொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் ஆராய தேர்தல் ஆணைக்குழு நேற்று கூடியிருந்தது.

இதன்போது, நீதிமன்றத்தின் ஊடாகவே கட்சியின் உள்ளக பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நோர்வூட் பிரதேச சபையில் இ.தொ.கா. விரைவில் ஆட்சியமைக்கும்!

‘‘நுவரெலியா மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இ.தொ.காவும், தேசிய மக்கள் சக்தியும்...

தமிழக மீனவர்கள் 7 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு 400-க்கும் மேற்பட்ட...

பஸ் கட்டண திருத்தம்?

எரிபொருள் விலை திருத்தத்துடன் பஸ் கட்டண திருத்தம் தொடர்பாக அடுத்த 2...

கஹாவத்தை துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

கஹவத்த பகுதியில் நேற்று இரவு (30) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...