தலைநகரில் மக்களை திரட்டி கம்பெனிகளுக்கு எச்சரிக்கை விடுத்த இதொகா!

Date:

பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு, கோட்டை ரயில் நிலையம் முன்பாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஏற்பாட்டில் போராட்டம் ஒன்று இன்று (19) முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் பழனி சக்திவேல்,

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நீண்ட கால அரசியல் வரலாறு உடைய அமைப்பு. இந்த நாட்டில் பெருந்தோட்ட துறையில் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் உள்ளனர். இந்த மக்களுக்கு நாங்கள் கூட்டு ஒப்பந்தம் ஊடாக சம்பளத்தை பெற்றுக்கொடுத்து இருந்தோம்.

இந்த நாட்டில் உண்மையாக இரத்தம் சிந்தி, வியர்வை சிந்தி உழைக்கும் தொழிலாளிகளுக்கு 1,700 அடிப்படை சம்பளமாக வழங்க வேண்டும்.

ஆனால் அதை முதலாளி சம்மேளனம் வழங்க மறுக்கிறது. எனவேதான் அவர்களை கண்டித்து ஆர்ப்பாட்டம் மேற்கொண்டுள்ளோம். எதிர்வரும் 24ம் திகதி சம்பள சபை கூட்டத்தில் கலந்து கொண்டு 1700 ரூபா சம்பளம் வழங்க அவர்கள் இணங்க வேண்டும். இல்லாவிட்டால் முழு மலையகமும் ஸ்தம்பிதமடையும் என்றார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மாளிகாவத்தையில் துப்பாக்கிச் சூடு

மாளிகாவத்தை ஜும்மா மஸ்ஜித் சாலையில், ஒரு வணிக இடத்தில் இருந்த இளைஞனை...

ஐக்கிய தேசியக் கட்சியின் இரண்டு முக்கியஸ்தர்கள் கைது?

இந்த வாரம் ஐக்கிய தேசியக் கட்சியின் இரண்டு முக்கியஸ்தர்கள் கைது செய்யப்படுவார்கள்...

திகதி மாற்றம் செய்த ஐதேக

எதிர்வரும் சனிக்கிழமை (06) நடைபெறவிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் 79வது ஆண்டு...

ஆகஸ்ட் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 20.4 சதவீதம் அதிகரிப்பு

ஆகஸ்ட் மாதத்தில் நாட்டிற்கு வந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 20.4...