தென் மாகாண ஆளுநர் பதவி விலகல்! புதிய ஆளுநர் போட்டியில் இருவர்

Date:

தென் மாகாண ஆளுநர் வில்லி கமகே அந்தப் பதவியில் இருந்து விலகத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, மே மாதம் 2ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் அவரது இராஜினாமா கடிதம் ஜனாதிபதி செயலாளரிடம் வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

கடந்த ஏப்ரல் மாதம் 8ஆம் திகதி இந்த ராஜினாமா கடிதத்தை அவர் கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

பதவியை விட்டு வெளியேறியதன் பின்னர் பாதுகாப்பாக ஓய்வு பெற தீர்மானித்துள்ளதாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவிடம் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது வடமேற்கு ஆளுநராக கடமையாற்றும் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தென் மாகாண ஆளுநராக நியமிக்கப்படவுள்ளதாகவும் வெற்றிடம் ஏற்படும் வடமேல் மாகாணத்தின் ஆளுநராக மறைந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மனைவி அல்லது முன்னாள் அமைச்சர் நசீர் அஹமட் நியமிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தமிழக முதல்வர், மக்களுக்கு இலங்கை மக்கள் சார்பாக செந்தில் தொண்டமான் நன்றி

இலங்கையில் ஏற்பட்ட கடும் வெள்ளப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப்...

தெஹிவளையில் ஒருவர் சுட்டுக் கொலை

தெஹிவளை பொலிஸ் பிரிவில் உள்ள ஏ குவார்ட்டர்ஸ் விளையாட்டு மைதானத்திற்கு அருகில்...

இலங்கை மக்களுக்கு தமிழக நிவாரணம்

இலங்கையில் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்குரிய அத்தியாவசியப் பொருட்களை தமிழக அரசாங்கம் அனுப்பி...

“சௌமிய தான யாத்ரா” நிவாரண பணி களத்தில் செந்தில் தொண்டமான்

அண்மையில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட களுத்துறை மாவட்டத்தின் கிரிவாணகிட்டிய தோட்டத்தில் உள்ள...