தென் மாகாண ஆளுநர் பதவி விலகல்! புதிய ஆளுநர் போட்டியில் இருவர்

Date:

தென் மாகாண ஆளுநர் வில்லி கமகே அந்தப் பதவியில் இருந்து விலகத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, மே மாதம் 2ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் அவரது இராஜினாமா கடிதம் ஜனாதிபதி செயலாளரிடம் வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

கடந்த ஏப்ரல் மாதம் 8ஆம் திகதி இந்த ராஜினாமா கடிதத்தை அவர் கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

பதவியை விட்டு வெளியேறியதன் பின்னர் பாதுகாப்பாக ஓய்வு பெற தீர்மானித்துள்ளதாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவிடம் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது வடமேற்கு ஆளுநராக கடமையாற்றும் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தென் மாகாண ஆளுநராக நியமிக்கப்படவுள்ளதாகவும் வெற்றிடம் ஏற்படும் வடமேல் மாகாணத்தின் ஆளுநராக மறைந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மனைவி அல்லது முன்னாள் அமைச்சர் நசீர் அஹமட் நியமிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நிதி அமைச்சின் உதவி இயக்குநர் தற்கொலை

இலங்கை நிதி அமைச்சின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தில் (ERD) உதவி இயக்குநராகப்...

இலங்கையின் கடன் சுமை பாரிய அளவில் அதிகரிப்பு

ரூபாய் மதிப்பு சரிவடைந்ததன் விளைவாக நாட்டின் கடன் சுமை ரூபாய் 1.1...

ரணிலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

அரசு நிதியை தவறாக பயன்படுத்தி லண்டன் நோக்கி தனிப்பட்ட பயணம் மேற்கொண்டதாக...

கட்சியில் இருந்து முழுமையாக விலகுமாறு எரானிடம் SJB கோரிக்கை

இலங்கை கிரிக்கெட் இடைக்கால குழுவின் தலைவராக எரான் விக்கிரமரத்ன நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து,...