சமையல் எரிவாயு குறித்த முக்கிய அறிவித்தல்

Date:

எதிர்வரும் 25 ஆம் திகதி வரை வீட்டுப் பாவனைக்கான சமையல் எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகிக்க முடியாது என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

போதுமான அளவு எரிவாயு சிலிண்டர்கள் இன்மையால் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

எரிவாயு தீர்ந்துபோயுள்ள காரணத்தினால் கடந்த 12 ஆம் திகதி தொடக்கம் வீட்டுப் பாவனைக்கான சமையல் எரிவாயு சிலிண்டகைளை விநியோகிக்கும் நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளது.

தலா 3,600 மெற்றிக் தொன் சமையல் எரிவாயுவை ஏற்றிய இரு கப்பல்கள் எதிர்வரும் 25 அல்லது 26 ஆம் திகதி நாட்டை வந்தடையவுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.

அதன் பின்னர் வீட்டுப் பாவனைக்கான சிலிண்டர்களை விநியோகிக்க முடியும் என அவர் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் தொழிற்சாலைகள், வைத்தியசாலைகள், தகன சாலைகள் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கான எரிவாயு விநியோகம் முன்னெடுக்கப்படுவதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

இதேவேளை, சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இன்மையால் மக்கள் தொடர்ச்சியாக பாதிப்புகளை எதிர்நோக்கி வருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

திருமலை சம்பவத்துக்கு திருமா கண்டனம்!

கவுதம புத்தர், சிங்கள இனவெறி ஆதிக்கத்தை தமிழ் மண்ணில் நிறுவுவதற்கான கருவியா? சிங்கள...

நடக்கவே முடியாத வயதிலும் களத்துக்கு வருகிறார் மஹிந்த!

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையில் எதிர்வரும் 21ஆம் திகதி எதிர்க்கட்சிகள்...

இந்திய ஜார்கண்ட் மாநில மாநாட்டில் இதொகா தலைவர், ஶ்ரீதரன் எம்பி பங்கேற்பு

இந்தியாவில் ஜார்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற எரிபொருள் மற்றும் வலுசக்தி மாநாட்டில் இதொகா...

தங்காலையில் இருவர் சுட்டுக் கொலை

தங்காலை, உனகுருவாவில் உள்ள கபுஹேன சந்திப்பில் நேற்று மாலை 6.55 மணியளவில்...