சுயாதீன தொலைக்காட்சி சேவையின் ஊழியர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாக முறைப்பாடு கிடைக்கவில்லை!

Date:

சுயாதீன தொலைக்காட்சி சேவையின் முன்னாள் ஊழியர் ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாக தனக்கு எவ்வித முறைப்பாடுகள் கிடைக்கவில்லை. சம்பவம் தொடர்பில் முறையான முறைப்பாட்டைப் பெறுமாறு அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி கவிரத்ன அமைச்சரிடம் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.

“எனக்கு இதுவரை எந்த முறைப்பாடும் கிடைக்கவில்லை. இந்த சம்பவத்தை கேள்வியுற்ற நான், பாதிக்கப்பட்ட தரப்பினரிடமிருந்து முறையான முறைப்பாட்டைப் பெற்றுக்கொள்ளுமாறு அமைச்சின் செயலாளர் அனுஷ பெல்பிடவுக்கு அறிவுறுத்தியுள்ளேன். முறையான முறைப்பாடு அளிக்கும்படி அவர் பாதிக்கப்பட்டவரிடம் தெரிவித்திருக்கிறார்” என அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக ஆலோசனை உதவிகளை வழங்க சட்டமா அதிபர் திணைக்களம் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக பெண் சட்டத்தரணி ஒருவர் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக சுயாதீன தொலைக்காட்சி சேவையின் பணிப்பாளர் தம்மிடம் தெரிவித்ததாகவும் அமைச்சர் இன்று பாராளுமன்றில் கூறியுள்ளார்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அடுத்த தேர்தலுக்கு முன் எதிர்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் சிறையில்

அடுத்த தேர்தல் நடைபெறும் நேரத்தில், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த அனைத்து அரசியல்வாதிகளும் சிறையில்...

சீனி ஊழல் முடிவுக்கு வந்தது

2020 ஒக்டோபரில் சீனி மீதான ஐம்பது ரூபாய் வரியை 25 சதங்களாக...

யாழ் மாநகரின் முதல்வராக மதிவதனி தெரிவு

யாழ் மாநகர சபையின் முதல்வராக மதிவதனி விவேகானந்தராஜா 19 வாக்குகளை பெற்று...

நாமல் – சஜித் அணி இணைந்து பிடித்த ஆட்சி

உடபத்தாவ பிரதேச சபையில் அதிகாரத்தை நிறுவுவது தொடர்பான வாக்கெடுப்பு நேற்று (ஜூன்...