ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயார் – சம்பிக்க அறிவிப்பு

Date:

இந்த நாட்டின் ஜனாதிபதியாக வருவதற்கு மற்றவர்களிடம் இல்லாத பல தகுதிகள் தனக்கு இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுமாறு மக்களிடம் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டால் அது தொடர்பில் பரிசீலிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தாம் தந்தையின் பரம்பரையிலோ, வேறு அரசியல்வாதியின் இடத்திலோ அரசியலுக்கு வந்தவன் அல்ல என்றும், அமைச்சர் என்ற பொறுப்பை மோசடி, ஊழலின்றி நிறைவேற்றி, அமைச்சை லாபகரமாக்கியதை நாடு அறியும் என்றார்.

திறமையான இராணுவ அதிகாரிகள், அதிசிறந்த விளையாட்டு வீரர்கள், பரம்பரை பரம்பரையாக உரிமை கோருபவர்கள், பாரம்பரிய கட்சி தலைவர்கள் ஆகியோருக்கு இனிமேல் ஜனாதிபதி வேட்புமனு வழங்கக்கூடாது என்றும் அவர் கூறுகிறார்.

பொருளாதாரத்தை சரியாக நிர்வகித்து நாட்டை கட்டியெழுப்பும் திறமை உள்ள ஒருவருக்கு அந்த சந்தர்ப்பம் கிடைக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இறக்குமதி ஒழுங்குகள் குறித்து ஜனாதிபதி விடுத்துள்ள வர்த்தமானி அறிவித்தல்

இலங்கையிலிருந்து மேற்கொள்ளப்படும் இறக்குமதிகள் தொடர்பான வெளிநாட்டு நாணயக் கொடுப்பனவுகளை மிகவும் திறம்படக்...

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான அமெரிக்க விசாரணை அறிக்கைகளை அரசு பெற்றுள்ளதா?

2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக, அப்போது...

ரணிலிடம் மீண்டும் ஆட்சியை ஒப்படைக்க நாட்டு மக்கள் தயாரில்லை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் மீண்டும் நாட்டின் ஆட்சிப் பொறுப்பை வழங்க...

அமெரிக்கா – ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் கைச்சாத்து

மேற்கு ஆசிய பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழலை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில்,...