இலங்கையில் நேற்று (ஏப்ரல் 25) 04 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.
2019ஆம் ஆண்டின் பிற்பகுதியில் கொவிட் தொற்றுநோய் பரவ ஆரம்பித்ததிலிருந்து நாட்டில் கண்டறியப்பட்ட மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கையை 672,143 ஆக உள்ளது.
655,000 க்கும் அதிகமானோர் தொற்றிலிருந்து குணப்படுத்தப்பட்டனர். 16,800 க்கும் மேற்பட்டோர் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது.
இந்நிலையிலேயே இலங்கையில் மீண்டும் கொவிட்-19 தொற்றுக்கு உள்ளாகுவர்கள் கண்டறியப்பட்டு வருகின்றனர்.
N.S