கிழக்கு அரச உத்தியோகஸ்தர்களுக்கான புதிய கட்டடம் ஆளுநரால் திறந்து வைப்பு!

Date:

கிழக்கு மாகாண அரச உத்தியோகஸ்தர்கள் அவர்களின் பணிகளை சரியாக முன்னெடுக்க தங்களுக்கு போதுமான இட வசதிகள் இல்லையெனவும், தங்களுக்கு தளபாட வசதிகளுடன் கூடிய கட்டடத்தொகுதி பொருளாதார நெருக்கடியால் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், அக்கட்டடத்தை நிர்மாணித்து தருமாறு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானிடம் கோரிக்கை முன்வைத்தனர்.

அக்கோரிக்கையின் பிரகாரம் ஆளுநர் செந்தில் தொண்டமானின் 241 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டின் கீழ் இக்கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டு, கிழக்கு மாகாண அரச உத்தியோகஸ்தர்கள் எவ்வித இன்னல்களும் இன்றி தங்களது கடமைகளை திறம்பட செய்ய அனைத்து வசதிகளுடன் கூடிய கட்டடத்தொகுதி ஆளுநரால் இன்று திருகோணமலையில் திறந்து வைக்கப்பட்டதுடன், அரச உத்தியோகஸ்தர்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.

அரச உத்தியோகஸ்தர்கள் வேகமாக மக்கள் பணியை முன்னெடுக்க இக்கட்டிடத்தை நிர்மாணித்து கொடுத்த ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு நன்றிகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஷம்மி சில்வாவை அகற்றும் முடிவு பொய்

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வாவை அந்த பதவியில் இருந்து...

1000 கோடி தர முடியாது – சட்டத்தின் ஊடாக மோதி பார்ப்போம்!

விவசாயம், நிலம், பாசனம் மற்றும் கால்நடை வளங்கள் அமைச்சர் கே.டி. லால்காந்தின்...

NDB விவகாரம் CID அலசல்!

நம்பகமான தகவல்களின் படி, தேசிய அபிவிருத்தி வங்கி பிஎல்சி (NDB)யில் இடம்பெற்றதாக...

மன்னிப்பே கிடையாது!

தனது சொத்து மற்றும் கடன் அறிக்கைகள் தொடர்பாக பொய்யான செய்திகளை வெளியிட்ட...