வெடுக்குநாறி மலையில் மீண்டும் சிவலிங்கத்தை நிறுவ நீதிமன்றம் உத்தரவு!

Date:

வவுனியா வெடுக்கநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் உடைக்கப்பட்ட சிலைகளை உடன் மீண்டும் நிறுவ வவுனியா நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

அங்கிருந்து கொண்டு செல்லப்பட்ட சிலைகளை மீண்டும் ஆலய நிருவாகத்தினரிடம் கையளிக்குமாறு சம்பந்தப்பட்ட தரப்புக்கு மன்று உத்தரவு இட்டுள்ளது.

நாளை முதல் அங்கு வழிபாடுகளை மேற்கொள்ள முடியும் எனவும் தொல்லியல் தரப்பினர் தடைகளை ஏற்படுத்தக் கூடாது எனவும் உத்தரவு இடப்பட்டுள்ளது.

ஆலய பரிபாலன சபை சார்பாக மன்றிலே ஜனாதிபதி சட்டத்தரணியும், பாராளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன் ஆஜராகி செய்ய சமர்ப்பணங்களின் பிரகாரம் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது.

இதற்கு முன்னர் கடந்த வழக்குத் தினத்திலே வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தின் வழிபாட்டுக்கும், பூசைகளிற்கும் எந்தவொரு அரச அதிகாரிகளும் தடைவிதிக்க முடியாது என வவுனியா மாவட்ட நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது!

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நிதியமைச்சின் செயலாளராக பிரதி நிதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும?

நிதியமைச்சின் செயலாளராக பிரதி நிதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெருமவை நியமிக்க...

28 அரசியல் பிரபலங்களின் சொத்துக்கள் குறித்து விசாரணை!

குற்றப் புலனாய்வுத் துறையின் சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவு, முந்தைய அரசாங்கத்தின்...

மேன்முறையீட்டு நீதிமன்ற புதிய தலைவர் நியமனம்

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் புதிய தலைவராக சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி...

நள்ளிரவு முதல் ரயில் வேலைநிறுத்தம்

இன்று (19) நள்ளிரவு முதல் 48 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தில்...