30 கிலோ போதை பொருளுடன் ஒருவர் கைது

0
41

கடுவெல, பொமிரிய பிரதேசத்தில் ஐஸ் மற்றும் ஹெரோயின் உள்ளிட்ட 30 கிலோ போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் பியகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் இருந்து 15 கிலோ ஐஸ் போதைப்பொருள், 14 கிலோ ஹாஷ் போதைப்பொருள் மற்றும் 941 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

30 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் 7 இலட்சம் ரூபா பணம் மற்றும் வாகனம் ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here