ஊழியர் சேமலாப நிதிக்கான வட்டி விகிதம் 13 சதவீதமாக அதிகரிப்பு – நிதி இராஜாங்க அமைச்சர்

Date:

ஊழியர் சேமலாப நிதிக்கு வழங்கப்பட்டிருந்த 9 சதவீத வட்டி விகிதத்தை 13 சதவீதமாக அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது இதனை தெரிவித்த நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய,முன்னதாக ஊழியர் சேமலாப நிதிக்கு 9 சதவீத வட்டி விகிதமே வழங்கப்பட்டிருந்தது எனவும், எமது நாட்டில் ஊழியர் சேமலாப நிதியின் வைப்புத் தொகை மிகவும் அதிகமாகும் எனவும் தெரிவித்துள்ளார்.இதில் 27 இலட்சம் உறுப்பினர்கள் காணப்படுகின்றனர்.2023 ஆம் ஆண்டு ஊழியர் சேமலாம நிதியின் வருங்கால வைப்பு நிதியை முதலீடு செய்து, அதில் ஈட்டிய பணத்தில் 9 சதவீதத்திற்கு பதிலாக 13 சதவீதத்தை வழங்க அரசாங்கம் தயாராக உள்ளது.இந்த வட்டி விகிதம் குறைந்தபட்ச விகிதமாக 9 வீதமே காணப்பட்டிருந்தது.ஆனால் இன்று இதனை 13 சதவீதத்தை அதிகரித்திருப்பது அரசாங்கத்திற்கு கிடைத்த வெற்றியாகும்.அந்த நிதியின் முதலீடு உறுப்பினர்களுக்கே வழங்கப்படுவதாக அவர் தெரிவித்தார்

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஹர்ஷண சூரியப்பெரும நிதி அமைச்சின் செயலாளராக நியமிப்பு

தேசிய மக்கள் சக்தியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷண சூரியப்பெரும நிதி...

ஹம்பாந்தோட்டை மாநகர சபையில் sjb ஆட்சி

கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் எதிர்க்கட்சி பெரும்பான்மையைப் பெற்ற ஹம்பாந்தோட்டை மாநகர சபையில்...

காலி அக்மீமன பகுதியில் துப்பாக்கிச் சூடு

காலி, அக்மீமன, வெவேகொடவத்த பகுதியில் இன்று (ஜூன் 23) அதிகாலை துப்பாக்கிச்...

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்

போர்டோவ், நடான்ஸ் மற்றும் எஸ்பஹான் உள்ளிட்ட ஈரானில் உள்ள மூன்று அணுசக்தி...