அமைச்சு பதவி கொடுக்காமல் தடுக்க 50 கோடி ரூபா பெற்ற சமல்!

Date:

முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்ஷ, வர்த்தகர் டட்லி சிறிசேனவிடம் இருந்து 500 மில்லியன் ரூபாவை இடமாற்றத்திற்காக பெற்றுக்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

மகாவலி அமைச்சின் 500 மில்லியன் ரூபாவை வழங்காமல் அமைச்சர் ஒருவர் பெற்றுக்கொண்டதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க நேற்று பொலன்னறுவையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவரது நண்பர்களிடம் வினவியபோது சமல் ராஜபக்ச அமைச்சுப் பதவியை வழங்காமல் பணம் பெற்றுக்கொண்டதாக கூறியுள்ளனர்.

மகாவலி இராஜாங்க அமைச்சு தமக்கு வழங்கப்படுமாயின் அது மைத்திரிபால சிறிசேனவின் அரசியல் வாழ்க்கையைப் பாதகமாகப் பாதிக்கும் எனவும் எனவே அவருக்கு அமைச்சுப் பதவி வழங்கப்படக் கூடாது எனவும் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

இதன்படி மகாவலி அமைச்சு ஜானக வக்கும்புரவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவர் சமல் ராஜபக்சவின் உறவினர். இதற்கு முன்னர் சமல் ராஜபக்ஷ மகாவலி அமைச்சை குறைந்தபட்சம் மூன்று மாதங்களுக்கு வேண்டும் என்று கூறி பெற்றுக்கொண்டார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

துமிந்த திசாநாயக்க தொடர்ந்தும் விளக்கமறியலில்

முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இன்று கல்கிசை நீதவான்...

அர்ச்சுனா வெளியிட்ட செய்தி பொய்

கடந்த காலங்களில் சுங்கத்திலிருந்து விடுவிக்கப்பட்ட கொள்கலன்களில், விடுதலைப் புலிகளின் முன்னாள் தலைவர்...

கொவிட் அச்சம் வேண்டாம்

கொவிட் உள்ளிட்ட தற்போது நாட்டில் பரவி வரும் நோய்கள் தொடர்பாக பொதுமக்கள்...

மேலும் ஒரு ராஜபக்ஷ கைது?

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ வாக்குமூலம் அளிப்பதற்காக இலஞ்ச ஊழல்...