தோட்ட தொழிலாளர் சார்பில் சட்ட உதவி வழங்க ஜனாதிபதி முடிவு

0
174

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்புக்கு எதிராக தோட்ட முதலாளிகள் வழக்குத் தாக்கல் செய்தால், தொழிலாளர்களின் தரப்பில் இருந்து வழக்கு விசாரணைக்கு ஆதரவளிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

முதலாளிகள் சம்பள உயர்வு விடயத்தில் தொடுக்கும் வழக்கு தொடர்பில் தொழிலாளர்கள் தரப்பில் இருந்து உண்மைகளை முன்வைப்பதற்கு தேவையான சட்ட ஆலோசனைகளையும் சட்ட உதவிகளையும் வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார ஆகியோர் இணை அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளனர்.

கொட்டகலையில் நடைபெற்ற மே தினக் கூட்டத்தில் தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் 1700 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்ததுடன், சம்பள அதிகரிப்பு தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தலையும் தொழிலாளர் ஆணையாளர் நாயகம் வெளியிட்டார்.

தோட்ட நிறுவனங்களுடன் எவ்வித கலந்துரையாடலும் இன்றி உரிய சம்பள அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளதால் நீதிமன்றத்தை நாடவுள்ளதாக தோட்ட முதலாளிமார் சம்மேளனம் தெரிவித்தது.

இலங்கை தோட்ட முதலாளிமார் சட்ட சம்மேளனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் ஜனாதிபதி உரிய கருத்து வெளியிடும் போது, அவரது தொழிற்சங்கம் சம்பள அதிகரிப்பு தொடர்பில் இறுதித் தீர்மானத்தை எடுக்கவில்லை. எவ்வாறாயினும், தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தோட்ட முதலாளிகளின் சம்மதத்துடன் அறிவிக்கப்பட்டதாக அரசாங்கம் கூறுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here