Saturday, May 18, 2024

Latest Posts

விபத்தில் இருவர் பலி

இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கிம்புலாவல பிரதேசத்தில் இந்த பயங்கர விபத்து இடம்பெற்றுள்ளது.

மிரிஹான மற்றும் மாதிவெல பிரதேசத்தில் வசிக்கும் 18 மற்றும் 20 வயதுடைய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கிம்புலாவல பிரதேசத்தில் இருந்து நவரோஹல நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் எதிர்திசையில் வந்த மற்றுமொரு மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் காயமடைந்த இருவரும் ஜயவர்தனபுர மற்றும் களுபோவில வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

துவிச்சக்கர வண்டியில் பயணித்தவர்கள் கவனக்குறைவாக வாகனத்தை செலுத்தியதாலேயே விபத்து ஏற்பட்டுள்ளதாக மேலதிக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மிரிஹான பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.