பசிலின் தலையீடு மீண்டும் அதிகரிப்பு ; பொதுஜன பெரமுனவில் கருத்து முரண்பாடு!

Date:

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கிய உறுப்பினர்கள் சிலர் கட்சியின் அடுத்த தலைவராக பசில் ராஜபக்சவை கொண்டுவருவதற்கு தயாராகி வரும் நிலையில், கட்சிக்குள் கடும் முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மே தின கூட்டத்தில் பசில் ராஜபக்சவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டமை குறித்து அக்கட்சிக்குள் பல்வேறு கேள்வி எழுந்துள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மீது மீண்டும் மக்கள் நம்பிக்கையை அழிக்கும் நடவடிக்கை இது உள்ளதாக சிலர் குற்றம் சுமத்துவதாகவும், ஒருசில சிரேஷ்ட எம்.பி.க்கள் கூட பசில் ராஜபக்சவுக்கு முன்னுரிமை வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும் அறிய முடிகிறது.

பசில் ராஜபக்சவின் தலையீட்டினால் குறிப்பிட்ட சில பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சியின் செயல்பாடுகளில் இருந்து விலகியுள்ளதாகவும், தலைமை மாற்றம் ஏற்பட்டால் அது கட்சியில் பிளவை ஏற்படுத்தும் என கருத்துக்களை அவர்கள் கூறியுள்ளதாகவும் அறிய முடிகிறது.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

2 மணிக்குப் பின்னர் மழை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மற்றும்...

போதை பொருள் கடத்திய 22 தேரர்கள் கைது! 110 கோடி பெறுமதி “குஷ்” “ஹேஷ்” மீட்பு!

சுமார் 110 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய "குஷ்" மற்றும் "ஹேஷ்"...

வெசாக் விடுமுறை, விசேட வர்த்தமானி

2026ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் உற்சவத்தின் உத்தியோகபூர்வ நிகழ்வு மே மாதம்...

நிதி திருட்டுக்கு ஜனாதிபதி, நிதி செயலாளர் பொறுப்பு

மத்திய காசாகாரத்திலிருந்து அமெரிக்க டாலர் 2.5 மில்லியன் தொகை காணாமல் போன...