ஜனாதிபதியின் கருத்துக்கு எதிராக மனு

Date:

எதிர்க்கட்சியின் பல்வேறு கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் சுமார் 25 நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுக்கு மனு ஒன்றை அனுப்பத் தயாராக உள்ளனர்.

அந்த மனுவில், நீதித்துறையை மதித்து அதன் சுயாதீனத்தை பாதுகாக்க வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

2026 மே 25 ஆம் திகதிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நீதிமன்ற தீர்ப்பை முன்னிட்டு, மக்களை ஆர்ப்பாட்டங்களுக்கும் கொண்டாட்டங்களுக்கும் தயாராக இருக்குமாறு ஜனாதிபதி தெரிவித்ததாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, சஜித் பிரேமதாச, திலித் ஜயவீர, ரோஹித அபேவர்தன, சாமர சம்பத் தசநாயக்க, கயந்த கருணாதிலக, இம்ரான் மஹ்ரூப், ரஞ்சித் மத்தும பண்டார, ஹேஷா விதானகே, ஹர்ஷண ராஜகருணா, நிசாம் காரியப்பர், ரவூப் ஹக்கீம், ஹெக்டர் அப்புஹாமி, அஜித் பி. பெரேரா, எஸ்.எம். மரிக்கார், ரோஹண பண்டார, சுஜீவ சேனசிங்க மற்றும் திலிப் வெதஆரச்சி உள்ளிட்ட உறுப்பினர்கள், ஜனாதிபதி தனது கருத்தை வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நாட்டில் தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி மழை நிலைமை

நாட்டில் தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி மழை நிலைமை படிப்படியாகத் தாபிக்கப்பட்டு வருவதாக...

அரசின் புதிய வரிக் கொள்கை ஜனநாயகத்திற்கு விழுந்த கொடிய அடி – எதிர்க்கட்சித் தலைவர்

தற்போதைய அரசு சர்வதேச நாணய நிதியத்தின் இலக்குகளை மீறிச் செல்ல ஆர்வம்...

நாட்டில் இன்றும் மழை

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் காலி மற்றும்...

டொலர் உயர்வுக்கும் அரசுக்கும் தொடர்பில்லை

தற்போது இலங்கையில் அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்து வருவது, அரசாங்க நிர்வாகத்...